மின்னல் வேகத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பைக்..!
நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி நெல்லை நான்கு வழி சாலையில் நடந்த இந்த விபத்தில் செட்டியூரை சேர்ந்த பரமசிவன் மற்றும் பீர் முகமது ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பாலமுருகன் என்பவர் கால் எலும்பு முறிந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





