சமூக நீதிக்கான அரசாக செயல்பட்டு வருகிறது தமிழ்நாடு அரசு – ஐகோர்ட் பாராட்டு
சமூக நீதிக்கான அரசாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பாராட்டியுள்ளது. விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் மாணவிகள் பாதுகாப்பு குறித்து தமிழ்நாடு அரசின் நடவடிக்கை பாராட்டத்தக்கது.
விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் மாணவிகளின் பாதுகாப்பு தொடர்பாக ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. மாணவிகள் பாதுகாப்பு பற்றி அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்று வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்ததற்கு பாராட்டு தெரிவித்துள்ளது.





