சூர்யா 41 படப்பிடிப்பில் பரபரப்பு..!
இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் நந்தா, பிதாமகன் போன்ற படங்களில் நடித்த நடிகர் சூர்யா 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் பாலாவின் இயக்கத்தில் தனது 41வது படத்தில் நடித்து வருகிறார். கன்னியாகுமரியை சுற்றி மார்ச் 28இல் துவங்கி படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
பாலாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சூர்யா படப்பிடிப்பு தளத்தை விட்டு வெளியேறியதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவிவருகிறது. படத்தின் தயாரிப்பாளரான ராஜசேகர் படப்பிடிப்பு சுமூகமான முறையில் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.





