குடியரசு தினம் – குடியரசுத் தலைவர் இன்று உரை..!
குடியரசு தினத்தை ஒட்டி குடியரசு தலைவர் திரௌபதி 3 இன்று நாட்டு மக்களுடன் உரையாற்றுகிறார். நாட்டின் 74ஆவது குடியரசு தினம் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுடன் உரையாற்றுகிறார்.
இது குறித்து குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் நாட்டு மக்களுடன் குடியரசுத் தலைவர் 7 மணிக்கு உரையாற்றுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதை அகில இந்திய வானொலி தனது அனைத்து இந்திய அலை வரிசையிலும் நேரடியாக ஒளிபரப்பும் என்றும் தூர்தர்ஷன் தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்புகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





