பயங்கரவாதிகளை ஒதுக்கியதே பிரதமர் மோடி தலைமையிலான அரசு : அமித்ஷா
பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நாட்டை சிறப்புடன் பாதுகாத்து வருகிறது என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று பேசிய அமைச்சர் பாகிஸ்தானில் இருந்து வந்த பயங்கரவாதிகள் தாக்குதல்களை நடத்தினர்.
ஆனால் நரேந்திர மோடி ஆட்சி காலத்தில் அத்தகைய தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டு அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாக அமித்ஷா குறிப்பிட்டு மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் தலைமையில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.





