5 பைசா மற்றும் 10 பைசா நாணயத்திற்கு பிரியாணி வழங்கப்பட்டதால் குவிந்த மக்கள்..!
தர்மபுரியில் புதிதாக திறக்கப்பட்ட உணவகத்தில் பத்து பைசா, 5 பைசா நாணயத்தை கொடுத்தால் பிரியாணி தருவதாக அறிவித்ததால் இடைவெளியின்றி ஏராளமானோர் பிரியாணி வாங்கி குவித்தனர்.
இண்டூர் பகுதியில் திறக்கப்பட்ட கடையில் காலை முதலே பல நாணயங்களுடன் பொதுமக்கள் பிரியாணி வாங்குவதற்காக குவிந்தனர். இதனால் கடை திறந்த சில மணி நேரங்களில் பிரியாணி முழுவதும் விற்று தீர்ந்தன. பெரும்பாலானோர் முக கவசம் அணியாமல் தனி மனித இடைவெளியை பின்பற்றாமல் இருந்தனர்.







