பொது இடங்களில் சிறுநீர் கழித்தால் ரூ.100 அபராதம்..நெல்லையில் அதிரடி..!
நெல்லை மாவட்டம் திசையன்விளை நாங்குநேரி வடக்கு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் சிறுநீர் கழித்தால் 100 ரூபாயும், மலம் கழித்தால் 500 ரூபாயும் அபராதம் விதிக்க பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள 17 பேரூராட்சிகளில் வடக்கு வள்ளியூர் நாங்குநேரி மற்றும் திசையின்விளை ஆகிய பேரூராட்சிகளில் முதல் கட்டமாக அபராதம் விதிப்பு அமலுக்கு வந்துள்ளது.





