முதலமைச்சர் விஜயின் ஆட்சியை 30 ஆண்டுகளுக்கு யாராலும் அசைக்க முடியாது – ஆர்.வி. உதயகுமார்
மக்கள் நலனைத் தவிர வேறு எதைப் பற்றியும் முதலமைச்சர் விஜய் கவலைப்படுவதில்லை என்றும், அவரது ஆட்சியை இன்னும் 30 ஆண்டுகளுக்கு யாராலும் அசைக்க முடியாது என்றும் இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
அந்த அச்சத்தில்தான் தீயசக்திகளும், அவற்றுக்கு துணை நிற்கும் சக்திகளும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாகக் கூறிய அவர், அவற்றைப் பார்க்கும்போது காமெடியாக இருப்பதாக விமர்சித்தார். மேலும், “ஒரு ஹீரோ ஆட்சி அமைத்துவிட்டால், காமெடியன்கள் இருக்கத்தான் செய்வார்கள்” என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.






