நாடாளுமன்ற வளாகத்தில் பீம் ஆர்மி நிறுவனர் ஆசாத் போராட்டம்
ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது டெல்லி காவல்துறை நடத்திய தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து, பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் பாராளுமன்ற வளாகத்திற்குள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
தனது எக்ஸ் தளப் பதிவில் ஆசாத் எழுதியதாவது: “மழையின் ஒவ்வொரு துளியையும் ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் அப்பாவி மக்கள் மீது நடத்தப்படும் அநீதியை ஏற்றுக்கொள்ள முடியாது. அநீதி இழைத்தவர்கள் எவ்வளவு சக்தி வாய்ந்தவர்களாக இருந்தாலும் சரி, அவர்களுக்குப் பின்னால் எவ்வளவு பெரிய படை பலம் இருந்தாலும் சரி, அவர்கள் இதற்கான பதிலைக் கூறியே ஆக வேண்டும்.” என்று பதிவிட்டுள்ளார்.






