அரசியல் ரீதியான தலைப்புச் செய்திகளே ராகுலுக்குத் தேவை – தர்மேந்திர பிரதான் சாடல்
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சி ஆகிய இரு தரப்பும் மாணவர்களை ஓர் அரசியல் கருவியாகப் பயன்படுத்துவதாக மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடுமையாகச் சாடினார். ராகுல் காந்தியும் அவரது கட்சியும் பிரதமரின் இல்லத்திற்கு வெளியே தர்ணா போராட்டம் நடத்தத் தேர்ந்தெடுத்தது பொதுமக்களுக்கு இடையூறை ஏற்படுத்தியதோடு, நடைமுறையில் உள்ள பாதுகாப்பு விதிமுறைகளையும் மதிக்கத் தவறிவிட்டது. அரசியல் ரீதியான தலைப்புச் செய்திகளே ராகுலுக்குத் தேவை” என்று அவர் கூறினார்.
காங்கிரஸ் தலைவருக்கு மாணவர்கள் மீது அக்கறை இல்லை என்றும், மோதலை உருவாக்குவதிலேயே அவர் குறியாக இருக்கிறார் என்றும் அமைச்சர் கூறினார். “நீட் தேர்வு குறித்து விவாதிக்கவும், நமது இளைஞர்களின் நியாயமான ஒவ்வொரு கவலையையும் நாடாளுமன்றத்தில் எழுப்பவும் நமது அரசு 100% கடமைப்பட்டுள்ளது. ஓர் அரசியல் பிரச்சாரத்தில் தங்களை வெறும் காய்களாகப் பயன்படுத்துவதை விட இந்திய மாணவர்கள் மிகச்சிறந்த அணுகுமுறைக்குத் தகுதியானவர்கள்.
அவர்களுக்குக் குழப்பத்திற்குப் பதிலாகத் தெளிவும், கோஷங்களுக்குப் பதிலாகத் தீர்வுகளும், இடையூறுகளுக்குப் பதிலாகப் பொறுப்புணர்வுமே தேவை” என்று அவர் கூறினார்.






