புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும்..!
புதுச்சேரியில் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். அரவிந்தர் சங்கத்தில் ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தாய்மொழிக் கல்வியை தான் புதிய கல்விக்கொள்கை வலியுறுத்துகிறது என தெரிவித்தார்.
உலக அரங்கில் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் குழந்தைகளை தயார் செய்யவும் புதிய கல்விக் கொள்கையை கொண்டு வரப்படுவதாகவும் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.





