கிருஷ்ணகிரியில் ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பு..!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மேய்ச்சலுக்காக விடப்பட்ட ஆட்டை மலைப்பாம்பு விளங்கியதால் கிராம மக்கள் அச்சமடைந்தனர். கிராமத்தில் வசிக்கும் விவசாயி தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு இருந்தார்.
அப்போது ஒரு ஆட்டின் குரல் கேட்டு சென்று பார்த்தபோது மலைப் பாம்பு விழுங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவலறிந்த வனத்துறையினர் மலைப்பாம்பை வனப்பகுதியில் விடுவதற்கு எடுத்துச் சென்றனர்.






