தாய்மொழி என்பது தேன்கூடு, அதில் கை வைப்பது ஆபத்து : முதலமைச்சர்
தாய்மொழி என்பது தேன்கூடு. அதில் கை வைப்பது ஆபத்து. கட்டாயமாக ஒரு மொழியை திணித்தால் அது பகை உணர்ச்சிக்கு இடம் கொடுக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தியை தவிர மற்ற இந்திய மொழிகளை பாரபட்சமாக அணுகுவது ஏன் என ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ரூபாய் நோட்டில் அச்சிடப்பட்டுள்ள மொழிகள் அனைத்தையும் இந்தியாவின் ஆட்சி மொழியாக அறிவிக்க தயக்கம் ஏன்? என கேள்வி எழுப்பியவர் மாநிலங்களவையில் அன்று அண்ணா கேட்டதை தான் அவரால் பெயர் சூட்டப்பட்ட தமிழ்நாடு கேட்கிறது.





