தாயை இழந்த கோலா குட்டிகளுக்கு பால் கொடுக்கும் நரி
ஆஸ்திரேலியாவில் பரவியுள்ள காட்டுத்தீ ஆயிரக்கணக்கான மரங்கள் அழிந்து போனாலும் பாசம் என்கிற உணர்வு அழிந்து விடவில்லை என்பதை வெளிக்காட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த காட்டுத்தீயின் ஆயிரக்கணக்கான விலங்குகள் தங்களது குட்டிகளையும், தாயையும் அக்னி தேவனுக்கு தாரைவார்த்து விட்டு தவிக்கின்றன.
அதேவேளையில் குட்டியை பறிகொடுத்த பெண் நரி ஒன்று தாயை இழந்த கோலா குட்டிகளுக்கு அமைதியாக பாலூட்டும் காட்சி இணையங்களில் பரவி வருகிறது. இதை மனிதாபிமானம் என்று சொல்வதா அல்லது மிருகாபிமானம் என்று செல்வதா என வலைதளங்களில் பெரும் விவாதமே நடக்கிறது.






