மனைவியுடன் தகாத உறவு வைத்த நண்பர் கொடூரமாக கொலை..!
தன் மனைவியுடன் தகாத உறவிலிருந்து நண்பரை இளைஞர் ஒருவர் கொடூரமாக கொலை செய்து வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்தவர் ராமு.
நண்பர்களுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்ற ராமு அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவரின் நண்பரான மணி என்பவரை பிடித்து விசாரித்தபோது தான் ராமு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
மனைவியுடன் ராமுவுக்கு தகாத உறவு இருந்ததாகவும் அதை கைவிட சொன்ன போது அவர் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ராமுவை மது குடிக்க வைத்து தன் நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கொலையாளிகளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






