நாகையில் முதன்முறையாக நியாய விலை கடை மூலம் சிலிண்டர் விற்பனை..!
நாகை மாவட்டத்தில் முதன்முறையாக நியாயவிலைக் கடைகள் மூலம் எரிவாயு உருளை விற்பனை தொடங்கியது. வணிக ரீதியிலான விற்பனையில் மாவட்ட ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் தொடக்கி வைத்தனர்.
இதன் மூலம் பொதுமக்கள் சிறு வியாபாரிகள் எந்தவித முன்பதிவும் இன்றி ஐந்து கிலோ எடையுள்ள எரிவாயு உருளையே விரைவாக பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





