வாகன ஓட்டியிடம் லஞ்சம் வாங்கிய பெண் போக்குவரத்து காவலர்..!
கோவையில் விதிகளை மீறிய வாகன ஓட்டியிடமிருந்து பெண் போக்குவரத்து காவலர் லஞ்சம் வாங்கியதாக கூறப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பெரியகடைவீதி காவல் நிலையத்தில் போக்குவரத்து காவலராக பணியாற்றி வந்த பாப்பாத்தி பணியில் இருந்தபோது விதியை மீறி வந்த வாகன ஓட்டி மீதான நடவடிக்கையை தவிர்க்க லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது.
பாப்பாத்தி மீது ஏற்கனவே லஞ்சப் புகார்கள் வந்திருந்த நிலையில் இந்த வீடியோ வெளியானதை அடுத்து அவர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டு அதோடு துறை ரீதியான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.







