மொபைல்போன் வெளிச்சத்தில் சிகிச்சை அளித்த டாக்டர்கள்..!
உத்திரபிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் மின்தடை ஏற்பட்டதால் நோயாளிக்கு மொபைல்போன் வெளிச்சம் மூலம் மருத்துவ சிகிச்சை அளித்துள்ளார்.
நேற்று பெய்த கனமழையால் அந்த பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்ட நிலையில் அங்குள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் ஜெனரேட்டரை இயக்கி உடனடியாக அவற்றை சீர் அமைக்க முடியவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்துத் தரையில் படுத்திருந்த நோயாளிக்கு செல்போன் மூலம் வெளிச்சம் பரப்பி மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதன் வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





