சாலையில் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்த சிறுவனை கடித்து குதறிய நாய்..!
கேரளாவில் சாலையில் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்த சிறுவனை தெருநாய் ஒன்று வெறித்தனமாக கடித்து காயப்படுத்திய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோழிக்கோடு அருகே சிறுவனை வெறித்தனமாக நாய் ஒன்று கடித்து குதறி உள்ளது. சிறுவன் தனது சைக்கிளில் அமர்ந்து வெளியே வந்தான். அப்பொழுது அந்த நாய் அவனை கடித்து கீழே தள்ளிய சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.





