தி.மு.க தவறான செய்தியை பரப்புகிறது – ஜெயக்குமார்
ராயபுரம் தொகுதியில் எனது வெற்றி உறுதியாகிவிட்டது. இதனை ஏற்க முடியாத தி.மு.க, எனது பெயரில் இருக்கும் சிலரை வேட்புமனு தாக்கல் செய்ய வைத்துள்ளார்கள்.
மேலும் இஸ்லாமியர்கள் வாக்கு இல்லாமலே வெற்றி பெறுவேன் என நான் பேசியதாக ஒரு தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள் என்று கூறிய அ.தி.மு.க வேட்பாளர் ஜெயக்குமார், மேலும் செல்போனை எடுத்து அதில் அந்த ஃபேக் செய்தியை செய்தியாளர்களிடம் காண்பித்தார். தொடர்ந்து சம்பந்தப்பட்ட செய்தி நிறுவனம், இந்த போலிச் செய்தியை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்





