பெருவெள்ளத்தில் சிக்கியவர்கள் ஏணியில் ஆபத்தான முறையில் மீட்பு..!
உத்தரகாண்டில் கனமழை எதிரொலியால் ஆற்றில் கரையோரம் புரண்டு ஓடும் வெள்ளத்தில் சிக்கிய கிராம மக்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர் கயிறு மற்றும் ஏணி மூலம் ஏற்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. டேராடூன் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் விகாஸ் நகர் பகுதியில் உள்ள ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனையடுத்து கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களை ஆற்றின் குறுக்கே ஏணியை பயன்படுத்தி மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.






