இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கருக்கு கொரோனா ..!
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் தனக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
அண்மையில் தன்னை சந்தித்தவர்கள் அனைவரும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.





