நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் மீது புகார்..!
வழக்கு விசாரணையின் போது மூத்த வழக்கறிஞர் பி.வில்சனிடம் நீதிபதி கண்ணியக் குறைவாக நடந்து கொண்டதாக நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் மீது வழக்கறிஞர் சங்கங்கள் சார்பில் தலைமை நீதிபதியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் ஏன் தங்கள் கண்ணியத்தை தியாகம் செய்ய வேண்டும்? வழக்கறிஞர்கள் தங்களுக்கு கீழானவர்கள் என்ற எண்ணத்தை நீதிபதிகள் கொண்டுள்ளனர் என வழக்கறிஞர்கள் சங்கங்கள் தரப்பு கருத்து.





