செல்போன் பழுது பார்க்கும் கடையில் வெடித்து சிதறிய செல்போன்..!
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் சார்ஜரில் இருந்த கைபேசி வெடித்து சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் கைபேசி கடை நடத்தி வருகிறார்.
கடையில் செல்போன்களைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தபோது அருகிலிருந்த கைபேசி பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.




