பானி பூரி கிரீடம், பானி பூரி மாலையை சூடிய பெண்..!
இந்திய திருமணங்களில் மணப்பெண்ணுக்கு பொதுவாக நகைகளை தாம் சூட்டி அழகு படுத்தி பார்ப்பார்கள்.
ஆனால் இங்கு மணப்பெண் ஒருவர் திருமண நாளில் தனக்கு பிடித்த உணவான பானிபூரியை நூலில் கோர்த்து கிரீடம் போல் தலையில் வைத்தும், மாலை போல் கழுத்தில் சூடிக்கொள்ளும் வீடியோ வெளியாகியுள்ளது.
தனக்கு மிகவும் பிடித்த இந்த உணவு மீதுள்ள காதலால் இம்மாதிரி செய்ததாக மணப்பெண் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.






