அர்னாப் கோஸ்வாமிக்கு இரண்டு வார நீதிமன்ற காவல் நீட்டிப்பு..!
தாயையும், மகனையும் தற்கொலைக்கு தூண்டியதாக மும்பையில் கைது செய்யப்பட்ட ரிபப்ளிக் டிவி தலைமை செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு இரண்டு வார நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
விளம்பர நிறுவனம் நடத்தி வந்த நாயக் என்பவருக்கு கோஸ்வாமி நிறுவனம் 5 கோடியே 40 லட்சம் ரூபாய் நிலுவை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த பணம் கிடைக்காத விரக்தியில் நாயக்கும், அவரது தாயாரும் கடந்த 2018ல் தற்கொலை செய்து கொண்டனர்.
இந்த வழக்கில் அர்னாப் கோஸ்வாமியை கைது செய்ததோடு அப்போது பெண் காவல் அதிகாரியை தாக்கியதாகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி மறுத்த நீதிபதி போலீசார் தாக்கியதாக கூறி அருணாவின் குற்றச்சாட்டுகளையும் நிராகரித்தார்.







