ஆஸ்திரேலியா காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் இந்திய தம்பதி
ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய தம்பதியினர் உணவு வழங்கி உதவி செய்துள்ளனர். பத்தாண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் மெல்பேர்னில் குடியேறிய கண்வாலஜ் சிங், கமலாஜித் கௌர் தம்பதி விக்டோரியா மாகாணத்தில் உணவகம் நடத்தி வருகின்றனர்.
தற்போது காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கில் கண்வாலஜ் சிங், கமலாஜித் கௌர் தம்பதி தங்களது உணவகத்தில் இருந்து உணவு பொருட்களை வழங்கி வருகின்றனர்.






