கபடி விளையாடிக் கொண்டிருந்த இளைஞர் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு..!
ஆந்திர மாநிலம் கடப்பாவில் கபடி விளையாடிக் கொண்டிருந்த பட்டதாரி இளைஞர் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த காட்சி வெளியாகியுள்ளது. கங்கையை பள்ளி என்ற ஊரில் மாவட்ட அளவிலான கபடி போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த போட்டியில் நரேந்திரா என்பவர் பங்கேற்று விளையாடிக் கொண்டிருந்தார். எதிரணியின் பக்கம் சென்று வந்த அவரை சக வீரர்கள் ஒன்று சேர்ந்து மடக்கிப் பிடித்து பின் விடுவித்துள்ளனர். அவரிடம் இருந்து விடுபட்டு எழுந்து நடக்க முயன்ற நரேந்திரன் அடுத்த நொடி முன்பாகவே சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.







