பென்ஸ் காரில் வந்து ரேஷன் கடையில் பொருட்களை வாங்கி சென்ற நபர்..!
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் பென்ஸ் காரில் வந்து ரேஷன் கடையில் ஒருவர் பொருட்களை வாங்கிச் சென்றுள்ளார். அங்குள்ள ஒரு ரேஷன் கடையில் காரை நிறுத்தி ரேஷன் கடை ஊழியர்கள் கோதுமையை காரின் பின்பக்கம் ஏற்றுகிறார்.
பஞ்சாப் மாநிலத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் வசிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் கோதுமைமாவு மூட்டைகள் தான் அந்த காரில் ஏற்றி செல்லப்பட்டுள்ளன. இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.





