தனது மகனை காப்பாற்ற உயிரை விட்ட தாய்..!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே நீர்வீழ்ச்சியில் அடித்து சென்ற மகனை காப்பாற்றிய தாய் நீரில் மூழ்கி உயிரிழந்தார். கொடியனூர் நீர்வீழ்ச்சியில் வள்ளி என்ற பெண் தனது இரண்டு மகன்களுடன் குளித்துக் கொண்டிருந்தார்.
அப்பொழுது இளைய மகன் நீரில் எதிர்பாராத விதமாக அடித்து செல்லப்பட்டான். விரைந்து செயல்பட்ட வள்ளி தனது மகனை பத்திரமாக மீட்டுவிட்டார். ஆனால் நீரில் அடித்து செல்லப்பட்ட வள்ளியை 2 மணி நேரம் போராடிய தீயணைப்பு துறையினர் சடலமாக மீட்டனர்.





