செல்போனை திருடியதாக கிணற்றுக்குள் தொங்கவிடப்பட்ட சிறுவன்..!
மத்திய பிரதேச மாநிலத்தில் செல்போனை திருடியதாக சிறுவன் கிணற்றுக்குள் தொங்கவிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் 18 வயது சிறுவனை கிணற்றுக்குள் ஒரு நபர் தொங்கவிட்டு திருடி செல்போனை கொடுத்து விடுமாறு மிரட்டியுள்ளார்.
அந்த சிறுவன் தான் செல்போனை எடுக்கவில்லை எனக் கூறி அழுதுள்ளார். இந்த சமூகத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. குழந்தையை மிரட்டியவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.






