தனியார் கல்லூரியில் உலா வரும் சிறுத்தை..!
கோவையில் உள்ள தனியார் கல்லூரி வளாகம் அருகே இரவில் உலா வரும் சிறுத்தையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மதுக்கரை வனப்பகுதியை ஒட்டிய குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறைக்கு பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.
நேற்றிரவு குனியமுத்தூர் அருகில் உள்ள தனியார் கல்லூரியின் பின்புறம் சிறுத்தை ஒன்று நாயை அடித்துக் கொன்று உள்ளது. இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் கல்லூரியிலிருந்து சிறுத்தையின் கால் தடத்தை ஆய்வு செய்தனர். இந்த நிலையில் சிறுத்தை நடமாட்டம் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.





