ஏரியில் மூழ்கி உயிரிழந்த மூன்று சிறுவர்கள்..!
திருவண்ணாமலை அருகே மீன்பிடிக்க சென்ற மூன்று சிறுவர்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்தனர். ஆருத்ரா பட்டு கிராமத்தை சேர்ந்த 8 வயது தரணிதரன், ஏழு வயது விக்னேஸ்வரன், நான்கு வயது சிறுவன் என்ற மூன்று சிறுவர்கள் ஏரியில் மீன் பிடிக்க சென்றனர்.
ஆழமான பகுதியில் இறங்கியதால் மூவரும் அடுத்தடுத்து நீரில் மூழ்கி உயிரிழந்தனர். போலீசார் விசாரித்து வருகின்றனர். ஒரேகிராமத்தை சேர்ந்த மூன்று சிறுவர்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






