நகசுத்து – தவறான சிகிச்சையால் பெண் உயிரிழப்பு..!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்து விட்டதாக கூறி அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்ற நிலையில் திடீரென உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவரது உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில் தவறான சிகிச்சை அளித்து பெண்ணின் உயிரிழப்புக்கு காரணமான தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.






