திருமணம் நடத்துவதற்கு வெளியாகியுள்ள புதிய கட்டுப்பாடுகள்..!
தமிழகத்தில் பெருந்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதை கருத்தில் கொண்டு பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு கடந்த வாரம் அறிவித்திருந்தது. குறிப்பாக கோவில்கள் மற்றும் மத வழிபாட்டு தளங்களில் எத்தனை பேர் கூடலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
நோய் பரவலை கருத்தில் கொண்டு திருவிழா மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமண மண்டபத்தில் அதற்கான ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நேரத்தில் மட்டுமே திருமணம் நடத்தப்படவேண்டும்.
ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரத்தில் 50 நபர்களுக்கும் மேல் அனுமதிக்க கூடாது. சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






