தேர்தல் தேதி அறிவிப்பிற்கு பின்னர் பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும்..!
சட்டமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு பிறகு முதல்வர், கல்வியாளர்கள் கலந்தாலோசித்து பள்ளிகளில் பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பான அட்டவணை வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்துள்ளார்.






