உத்தரகாண்ட்டில் காயமடைந்த பெண்ணை 40 கிலோமீட்டர் தூக்கி சென்ற வீரர்கள்..!
உத்தரகாண்ட் மாநிலத்தில் காயமடைந்த பெண்ணை இந்திய திபெத் எல்லைக் காவல்படை வீரர்கள் 40 கிலோமீட்டர் தூரம் தூக்கி சென்று மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். கிராமத்தில் வசிக்கும் அந்த பெண்ணுக்கு கால்களில் காயம் ஏற்பட்டு நடக்க முடியாத நிலையில் இருந்துள்ளார்.
தகவலறிந்து சென்ற வீரர்கள் அந்த பெண்ணை ஸ்ட்ரெச்சரில் வைத்து தூக்கி சென்றனர். காட்டாற்று வெள்ளம் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி என கரடுமுரடான வழியில் 15 மணி நேரம் நடந்து சென்று அந்த பெண்ணை வீரர்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.






