த.வெ.க-வின் குதிரைபேரங்களை விசாரிக்க சிபிஐ விசாரணை கேட்பீர்களா? விஜய்க்கு அப்பாவு சவால்
தேர்தல் முடிவுகள் வந்த அன்றே அதிமுகவின் ஆதரவை தவெக கோரியதாகவும், எடப்பாடி பழனிசாமி விதித்த நிபந்தனைகளை ஏற்காத தவெக, ஆத்திரத்தில் அதிமுகவை உடைத்துச் சின்னாபின்னமாக்கி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த உண்மைகளை மறைத்துவிட்டு, தற்போது அதிமுக, அமமுக மற்றும் பிற கட்சி எம்.எல்.ஏ.-க்களைத் தவெக தனது கட்சியில் சேர்த்துக்கொண்டு, தமிழகம் இதுவரை கண்டிராத வகையில் தொடர் குதிரை பேரம் நடத்தி வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தவெக செய்து வரும் இத்தொடர் குற்றங்களை விசாரிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தமிழக அரசு, கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு சிபிஐ விசாரணை கேட்டது போல, இந்த குதிரை பேரம் குறித்தும் சிபிஐ விசாரணை கோருவாரா அல்லது காவல்துறை மூலம் எதிர்கட்சிகளை மிரட்டுவாரா? – முன்னாள் சபாநாயகர் அப்பாவு கேள்வி





