ஒடிசா சட்ட சபைக்குள் நுழைந்த 6 அடி நீள சாரைப்பாம்பு..!
ஒடிசா சட்ட சபைக்குள் நுழைந்த 6 அடி நீள சாரைப்பாம்பை வனத்துறையினர் பத்திரமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர். அந்தப் பாம்பு சட்டசபையின் பாதுகாவல் அறைக்குள் பதுங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வன அலுவலருக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் பாம்பை பிடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
சில மணி நேர போராட்டத்திற்கு பிறகு செடிகளுக்கு நடுவில் பதுங்கி இருந்த அந்த பாம்பை லாவகமாக பிடித்த அலுவலர்கள் பின்னர் அதை பத்திரமாக வனப்பகுதிக்குள் கொண்டு போய்விட்டனர்.






