மாநிலங்களின் தலைநகரங்களின் பெயர்களை 48 நொடிகளில் கூறும் குழந்தை..!
சென்னையை சேர்ந்த 4 வயது சிறுமி இந்திய மாநிலங்களின் தலைநகரங்களை 48 நொடிகளில் கூறும் சாதனை வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜெயவந்திகா எனும் அந்த சிறுமியின் தாய் ஒவ்வொரு மாநிலத்தின் பெயரை சொல்ல சொல்ல சிறுமி ஜெய் அவந்திகா எவ்வித தடுமாற்றமும் தயக்கமோ இன்றி அந்தந்த மாநில தலைநகரங்களில் பெயர்களை அழகாகக் கூறுகிறார்.
இவ்வாறாக 48 நொடிகளில் அனைத்து மாநில தலைநகரங்களில் பெயர்களையும் கூறும் சிறுமியின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை மக்கள் அனைவரும் வியக்கத்தக்க விஷயமாக பார்த்து வருகின்றனர்.







