கடல் அலையை படம் பிடித்தவர் கடலுக்குள் தவறி விழுந்தார்
அமெரிக்காவில் கடல் சீற்றத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் அடித்து செல்லப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன. கலிபோர்னியா பகுதியில் சாண்டா க்ரூஸ் கோடிடும் கடல் பகுதியில் பாறையில் ஒருவர் கடல் அலையை படம்பிடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென எழுந்து வந்த பேரலை ஒன்று அந்த இளைஞரை தூக்கி வீசியது. பின்னர் பின்னால் சென்ற அலையின் தாக்கத்தில் அந்த இளைஞரும் இழுத்துச் செல்லப்பட்டு கடலுக்குள் விழுந்தார். இந்நிலையில் இளைஞர் கடலுக்குள் விழுந்த செய்தி அறிந்த கடலோர காவல் படையினர் அவரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.






