வாக்காளர்களுக்கு பரிசு கூப்பன் அளித்த வழக்கு: சி.விஜயபாஸ்கர் பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு
புதுக்கோட்டை மாவட்டம், விறாலிமலை தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சட்டமன்றத் தேர்தல் பரப்புரையின்போது, வாக்களர்களுக்கு பரிசு கூப்பன் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், சி.விஜயபாஸ்கர் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, சி.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அ.தி.மு.க-வில் இருந்து விலகி த.வெ.க-வில் இணைந்தார்.






