ரயிலை கவிழ்க்க முயன்றது ஏன்? சாமியார் பரபரப்பு
சமீபத்தில் அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் கற்கள் வைத்து ரயிலை கவிழ்க்க முயன்றதாக சாமியார் பிஜயகுமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரயிலில் நாடு முழுவதும் பயணம் செய்வதாகவும், டிக்கெட் எடுக்காததால் தன்னை ஆங்காங்கே TTE-க்கள் இறக்கிவிட்டுவிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவர்கள் மீதுள்ள கோபத்தில் ரயிலை கவிழ்க்க முயன்றதாக கூறியுள்ளார்.





