ஜெயில்கள் மீது தாக்குதல் நடத்த சதி… பாதுகாப்பு அதிகரிப்பு
பஹல்காம் தாக்குதலை அடுத்து ஜம்மு -காஷ்மீரில் பதற்றம் நீடிக்கிறது. இந்நிலையில் ஜம்மு – காஷ்மீரில் உள்ள சிறைச்சாலைகள் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனால் முக்கிய தீவிரவாதிகள் அடைக்கப்பட்டுள்ள ஸ்ரீநகர், ஜம்மு சிறைகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே 11வது நாளாக எல்லையில் பாக். ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.






