மகளின் திருமணத்திற்காக வாங்கப்பட்ட நகை 3 மணி நேரத்தில் திருட்டு..!
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே ஓய்வு பெற்ற பேராசிரியர் வீட்டில் 32 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்த கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
ஓய்வு பெற்ற பேராசிரியர் அர்ஜுனன் என்பவர் மனைவியுடன் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்காக அந்தியூர் சென்ற மூன்று மணி நேரத்தில் கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மகள் திருமணத்திற்காக 20 சவரன் நகைகளை வாங்கி வீட்டிலிருந்த பீரோவில் வைத்திருந்தது தெரிய வந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





