சாலையில் இறந்து கிடந்த கருடன்..பாடை கட்டி ஊர்வலமாக சென்று சடங்கு செய்த பொதுமக்கள்..!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த திம்மராயன்பாளையத்தில் நேற்று கருடன் என்று அழைக்கப்படும் கழுகு ஒன்று ரோட்டில் இறந்து கிடந்தது.
இதை பார்த்த பொது மக்கள் கருடனின் உடலை எடுத்து இந்து முறைப்படி இறுதி சடங்கு செய்ய முடிவு செய்தனர். தொடர்ந்து பாடை கட்டி கருடனின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு இறுதி சடங்கு செய்யப்பட்டது.





