பிரதமர் மோடிக்கு ஆதரவாக பேசியதால் மனைவியை விவாகரத்து செய்த கணவன்..!
பிரதமர் மோடி மற்றும் யோகி ஆதித்யநாத் தனது மனைவியை ஆதரித்ததாக உத்திரபிரதேசத்தில் ஒருவர் தனது மனைவிக்கு முத்தலாக் கொடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பிரதமர் மோடி மற்றும் யோகி ஆதித்யநாத்திற்கு வாக்களித்ததால் தனது கணவர் மற்றும் மாமியார் கொடுமைபடுத்தியதாக பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். தனது கணவர் முத்தலாக் சொல்லி தன்னை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.





