6 சிறுமிகளை பாலியல் துன்புறுத்தல் செய்த தலைமை ஆசிரியருக்கு 47 வருடம் கடுங்காவல்..!
சிவகங்கை மாவட்டத்தில் 6 சிறுமிகளை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் முருகனுக்கு 47 ஆண்டுகள் கடுங்காவல் மற்றும் 69 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆறு சிறுமிகளிடம் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக முருகன் கைது செய்யப்பட்டான். பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு அரசு சார்பில் 29 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





