இந்தியா vs தென்னாப்பிரிக்கா டி20 தொடர் இன்று ஆரம்பம்..!

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. தென்னாப்பிரிக்க அணியும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணியும் கைப்பற்றின.
இதையடுத்து டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது.

 

இதில் இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்படுவார். இந்த தொடருக்கான இந்திய அணியில் சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா, சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால், பும்ரா உள்ளிட்ட வீரர்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

 

இன்றைய போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள பராபதி விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி ஆசிய கோப்பை தொடரை வென்றதுடன் வலுவான ஆஸ்திரேலியா அணியையும் வீழ்த்தி இருக்கிறது.