பள்ளிகளில் ‘வாட்டர் பெல்’ திட்டம் அறிமுகம் ஆனது
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நீர்ச்சத்து குறைபாட்டை போக்கும் வகையில், ‘வாட்டர் பெல்’ எனும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்திருந்தார்.
அதன்படி, பள்ளிகளில் இன்று முதல் அத்திட்டம் அறிமுகமானது. அதன்படி காலை 11 மணி, மதியம் 1 மணி, பிற்பகல் 3 மணி என 5 நிமிடத்திற்கு தண்ணீர் அருந்த இடைவேளை விடப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




